பாக்தாத் (ஈராக்): ஈராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இருவேறு வெடிகுண்டு

தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் பலியாகினர். மற்றொரு இடத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 6 கொல்லப் பட்டதன் மூலம் ஈராக்கில் பலி எண்ணிக்கை 26 உயர்ந்துள்ளது.
தீவிரவாதம் வளர்த்த நாடான ஈராக்கின் தெற்கு பாக்தாத் மாவட்டத்தில் ஷியா முஸ்லீம்களின் மசூதியில், ரமலாம் தொழுகையின் போது, தற்கொலைப் படையைச் சார்ந்த ஒருவன் தனது குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 12 பேர் பலியாகினர்.
மேலும் ஷாபாரானியா மாவட்டத்தில் நடந்த சம்பவத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்து ராணுவ வாகனம் மீது மோதியதில், 4 இராணுவ வீரர்கள் உட்பட 8 அப்பாவிகள் பலியாகினர்.
இது மட்டுமல்லாமல் தியால மாகாண தலைநகர் பாகுபா நகரில் மர்ம ஆசாமி ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நன்றி: AFP.GOOGLE.COM
